வரி விதிப்பு காரணமாக அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் கலகெடிஹேன பகுதியில் நடைபெற்ற தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்றபோது சங்கத்தின் ஆலோசகர் காமினி மொரகொட இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

