Site icon Sangathy News

தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து

இந்தோனேசியாவில் இன்று பரபரப்பான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

போயிங் 737 வகையைச் சேர்ந்த விமானமொன்று ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றபோது, ​​விமானியின் திறமையால் பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 97 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் சீரற்ற வானிலை காரணமாக விமானத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச்சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

Exit mobile version