இலங்கையின் முதலாவது மெழுகு அருங்காட்சியகம் கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹெலேபொல வலவ்வவில் திறக்கப்படவுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் கண்டிய இராச்சியத்தின் கட்டடக்கலை, கலாசாரம் மற்றும் கலைகள் தொடர்பான மெழுகு சிலைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
காலனித்துவ காலத்தில் சிறைச்சாலையாக மாறிய எஹெலேபொல வலவ்வ, சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, பின்னர் கலாசார ஈர்ப்பான இடமாக மாற்றப்பட்டிருந்தது.

