Site icon Sangathy News

டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் : 161 பேர் மாயம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு தகவல்கள் மேலும் 161 பேரைக் காணவில்லை என்று தெரிவித்தன.

இறந்தவர்களில் 27 சிறுமிகள் மற்றும் ஒரு குழந்தைகள் முகாமில் பணியாற்றும் ஊழியர்கள் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வானிலை தொடர்ந்து மோசமடையும் என்று நாட்டின் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் ஒரு தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர் இழப்பு அதிகரித்து வருவதால் வெள்ள எச்சரிக்கைகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதால் சிக்கல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version