இலண்டன் சவுத்எண்ட் விமான நிலைய ஓடுபாதையில் ஒரு சிறிய விமானம், ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவம் மாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இடம்பெற்றதுடன், நேரில் பார்த்தவர்கள் தம்மை நடுங்க வைத்த பயங்கரமான சம்பவம் என விவரித்தனர்.
“எனது ஜன்னலிலிருந்து பெரிய தீப்பந்தத்தைக் கண்டேன்” என்று, உள்ளூர்வாசியான டான் ஹில் கூறியதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
“நான் இன்னும் பைத்தியம் போல் நடுங்குகிறேன். நான் அப்படி எதையும் பார்த்ததில்லை” என்று, அவர் மேலும் கூறினார்.
சவுத்எண்ட் விமான நிலையம், மத்திய இலண்டனுக்கு கிழக்கே 35 மைல் தொலைவில் சவுத்எண்ட்-ஆன்-சீயில் உள்ள ஒரு சர்வதேச பயண மையமாகும் என்று தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது அவர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. பொதுமக்கள் அந்தப் பகுதியை விட்டு விலகி இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 4 மணியளவில் சவுத்எண்ட்-ஆன்-சீயில் உள்ள இடத்தில் 12 மீட்டர் தொலைவில் விமானம் தீப்பிடித்து எரிவதாக எசெக்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளது.
விமான நிலையம் அதன் வலைத்தளத்தில், திங்கட்கிழமை அனைத்து விமானங்களும் – புறப்பாடு மற்றும் வருகைகள் – இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, 5 அனைத்துலக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் விமான நிறுவனத்திடம் ஆலோசனை கேட்குமாறு வலியுறுத்தியுள்ளது.
டச்சு நிறுவனமான ஜீஷ் ஏவியேஷன், அதன் SUZ1 விமானம், இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் விபத்தில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தியது.
நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் விமான நிலையத்தைச் சேர்ந்த குறித்த நிறுவனம், விசாரணையில் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஆதரவளிப்பதாகவும், “திக்கப்பட்ட அனைவருடனும் தங்கள் எண்ணங்கள் இருப்பதாகவும் கூறியது.
அந்த விமானம், ஞாயிற்றுக்கிழமை கிரேக்க தலைநகர் ஏதென்ஸிலிருந்து குரோஷியாவின் புலாவுக்குச் சென்று, சவுத்எண்டிற்குச் சென்றது. அன்று மாலை லெலிஸ்டாட் விமான நிலையத்திற்குத் திரும்பத் திட்டமிடப்பட்டது.

