யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் காரணமாக ஏற்பட்ட பதற்றநிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவத்தைக் கட்டுப்படுத்திய காவல்துறையினர், இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் அவர்கள், மூளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே, இன்றும் மோதல்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

