Site icon Sangathy News

புவி வெப்பமயமாதலைப் புறக்கணிக்கும் உலக நாடுகள்

பூமி வெப்பமயமாதல் குறித்து நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் தவறினால், அதை சர்வதேச சட்ட மீறலாகவே கணிக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்வு, பருவ மாற்றம் மற்றும் வன்மையான வெப்பத்தீவிரம் உள்ளிட்ட பரிணாம விளைவுகள் கடுமையாக உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இது சுற்றுசூழலுக்கும் மனித சமுதாயங்களுக்கும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு உள்ளிட்ட தீவு நாடுகள், கடல் மட்டம் உயர்வால் தங்கள் நாடுகள் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகக் கூறி, நெதர்லாந்தின் தி ஹேக் நகரத்தில் உள்ள ICJ-யில் வழக்கு தாக்கல் செய்தன. இந்த வழக்கில், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, மேலும் கடந்த இரு வாரங்களாக நேரடி வாதங்களும் நடைபெற்றன.

தலைமை நீதிபதி யூஜி, பசுமை இல்ல வாயுக்கள் மனித நடவடிக்கைகள் மூலம் உண்டாகின்றன என்பது தெளிவானது எனத் தெரிவித்தார். “காலநிலை மாற்றம் தொடர்பாக நாடுகள் கடமைகளை தவிர்க்க முடியாது. அவற்றை பின்பற்றத் தவறுவது, சர்வதேச சட்ட மீறலாகும்,” என அவர் வலியுறுத்தினார்.

இந்த வழக்கு ஒரு முன்நோடி தீர்ப்பாக அமைந்து, சுற்றுசூழலை மாசுபடுத்தும் நாடுகளுக்கு எதிராக புதிய கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version