மியான்மர் இராணுவம் பிப்ரவரி 2021 முதல் அறிவித்த அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட தேர்தலுக்குத் தயாராக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் சிவில் அரசாங்கத்தை அகற்றிய பின்னர், பிப்ரவரி 2021 இல் இராணுவம் அவசரகால நிலையை அறிவித்தது, இது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற உள்நாட்டுப் போரை ஏற்படுத்தியது.
அதன்படி, இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் சட்டமன்றம், நிர்வாக மற்றும் நீதித்துறை மீது உச்ச அதிகாரத்தைப் பெற்றார்.
இருப்பினும், தேர்தல்களை நடத்த மின் ஆங் ஹ்லைங் தலைமையில் 11 பேர் கொண்ட ஆணையத்தை நிறுவுவதாகவும் இராணுவ ஆட்சிக்குழு அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

