Site icon Sangathy News

கல்லடி பாலத்திற்கு அருகில் பொதுமகன் ஒருவர் உடலமாக மீட்பு

மட்டக்களப்பு கள்ளடி பாலத்திற்கு அருகிலுள்ள தேவாலயத்திற்கு அருகில் பொதுமகன் ஒருவர் இன்று (03) உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொதுமகன் கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், காத்தான்குடி காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காணாமல் போன பொதுமகன் இன்று உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Exit mobile version