Sangathy News

மரண அறிவித்தல் – திரு.ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம்

வடமாகாண கௌரவ ஆளுநரின் முன்னாள் உதவிச் செயலாளர், முன்னாள் பிரதித்திட்டப் பணிப்பாளர் _ திட்டமிடல் செயலகம் வடக்கு மாகாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு முன்னாள் உதவி அரசாங்க அதிபர் அமரர் திரு.ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம்
இயற்கை எய்தினார்.

இல. 42,கோவில் வீதி ஒழுங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் இன்று 02.08.2025) முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04.08.2025 திங்கட்கிழமை அன்று
காலை 10.00 மணிக்கு நெடுந்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு 05.08.2025 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொள்ளப்பட்டு தொடர்ந்து
நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன்சல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Exit mobile version