Site icon Sangathy News

தர்மஸ்தலாவில் புதைக்கப்பட்ட சடலங்கள் : மேலும் இரு நேரில் கண்ட சாட்சிகள்…!

இந்தியா – கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் உடலங்கள் புதைக்கப்பட்டதை தாங்கள் பார்த்ததாக, தர்மஸ்தலா காவல் நிலையத்தில், மேலும் இருவர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு தோண்டும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தர்மஸ்தலாவில் துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட, பெண்களின் சடலங்களை புதைத்ததாக, அங்கு பணியாற்றிய ஒருவர் செய்த முறைப்பாட்டின் கீழ் தற்போது அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி 13 இடங்களை அடையாளமிட்டு கடந்த மாதம் 29ம் திகதி முதல் தோண்டும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

Exit mobile version