புதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் .
ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது
இதன்போது புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன்போது புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கியுள்ளார் .

