இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீத வரியையும் விதித்தார்.
ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கிடையே உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின்-டிரம்ப் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

