நாளைய தினம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMAO) தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக நேற்றையதினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.
மருத்துவ அதிகாரிகளின் இடமாற்றச் செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட, பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.

