Site icon Sangathy News

இஸ்ரேலின் தாக்குதலில் பிரபலமான ஊடகவியலாளர்கள் நால்வர் உட்பட 15 பேர் பலி..!

தெற்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், சர்வதேச ஊடகவியலாளர்கள் நால்வர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் ரொய்டரஸ், அல்-ஜசீரா, எசோசியேற்றேர்ஸ் பிரஸ் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நெட்வேர்க் ஆகிய பிரபலமான ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவமோ அல்லது பிரதமரின் அலுவலகமோ இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

 

Exit mobile version