ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சூப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

