Site icon Sangathy News

விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்ட சத்யராஜ்

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய சத்யராஜ், “கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். தவறு என்பது தவறி செய்வது… தப்பு என்பது தெரிந்து செய்வது… தவறு செய்தவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து… சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ… தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ… ச்ச” என்று தெரிவித்தார்.

குறிப்பாக வீடியோ முடிவில் ‘ச்ச’ என்று வேதனையோடு சத்யராஜ் கூறினார்.

 

Exit mobile version