மரதானையில் நேற்று மாலை (27) காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

