Site icon Sangathy News

ஆர்சிபி அணியை கைப்பற்ற துடிக்கும் முன்னணி நிறுவனங்கள்

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது.

இதனைசின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது.

இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகினது.

இந்நிலையில் ஆர்சிபி அணியை வாங்க உள்நாட்டில் 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் 2 நிறுவங்களும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தனியார் பங்கு நிறுவனங்கள் என்பன ஆர்சிபி அணியை கைப்பற்ற போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version