Site icon Sangathy News

டெங்கு அபாயம் அதிகரிப்பு: 40,538 பேர் பாதிப்பு

இலங்கையில் தற்போது சீரற்ற காலநிலை காரணமாக நுளம்புகளின் அடர்த்தி (Density of mosquitoes) அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 40,538 டெங்கு (Dengue) நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதில், 44.3% பேர் மேல் மாகாணத்திலும் (Western Province), 13.9% பேர் சப்ரகமுவ மாகாணத்திலும் (Sabaragamuwa Province) உள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் அவதானிக்கப்படவில்லை என்றாலும், தற்போது நிலவும் காலநிலை காரணமாக நோய் அதிகரிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகவே இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ள மாவட்டங்களாகவிசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர அடையாளம் கண்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த டெங்கு நோய் பரவலால் இதுவரை 22 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் பெரும்பாலானவை இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

Exit mobile version