ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 127 ரன்களில் சுரண்டது.
தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 19 ரன்களும் அப்துல் மாலிக் 30 ரன்களும் அடித்தனர்.
அதன்பின் வந்த குர்பாஸ் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஜிம்பாப்வே அணியின் பிராட் எவன்ஸ் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முசாரபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படியுங்கள்: அஸ்வினுக்கு பதில் மற்றொரு தமிழக வீரரை எடுக்கும் சிஎஸ்கே? வெளியான குட் நியூஸ்
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாவே அணி, 359 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக பென் கரன் சதம் விளாசினார். அவர் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ஜியாவுர் ரஹ்மான் ஷெரிஃபி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 359 ரன்கள் குவித்ததன் மூலம் ஜிம்பாப்வே அணி 232 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் ஜத்ரன் 42 ரன்களும் பகீர் ஷா 32 ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் 20 ரன்களை கூட தாண்டவில்லை.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 43 ஓவரில் 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி, இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

