Site icon Sangathy News

சிறைச்சாலையில் கைதியொருவர் தற்கொலை

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று (29) பிற்பகல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சந்தேகநபர் மீது கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version