Site icon Sangathy News

மினுவாங்கொடையில் அதிரடி: வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் நபர் கைது!

மினுவாங்கொடையில் சட்டவிரோத ஆயுதங்களுடன் இருந்த ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர் நேற்று (27) கைதாகியுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மெகஸின் மற்றும் டி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 25 தோட்டாக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 43 வயதுடையவர் எனவும், அவர் மினுவாங்கொடை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சந்தேகநபரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோத ஆயுதப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Minuwangoda #CrimeNews #SriLankaPolice #BreakingNews #TamilNews #SafetyFirst #PoliceRaid

Exit mobile version