Site icon Sangathy News

கொல்லுப்பிட்டி ஹோட்டலில் அட்டகாசம்: காதலியைத் தாக்கி வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றிய காதலன்!

கொழும்பில் மொடலிங் துறையில் ஈடுபடும் பெண் ஒருவருக்கு அவரது காதலன் கொலை அச்சுறுத்தல் விடுத்து பெருந்தொகை பணத்தை பறித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மொடலிங் பெண்ணான சாரங்கி சங்கீதா, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்னை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நிலையில், 6 மில்லியன் ரூபாய் பணம் பறித்ததாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இரவு தன்னுடைய காதலனுடன் குறித்த ஹோட்டலுக்கு வந்ததாக அந்த யுவதி குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் அறையில் இருந்தபோது, ​​தனது காதலன் தன்னை மிரட்டி, தனது கையடக்க தொலைபேசி ஊடாக வங்கியிலிருந்து 6 மில்லியன் ரூபாவை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன்னைத் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து, ஹோட்டல் அறையில் விட்டுச் சென்றுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தமை காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் லலித் சிலோகமவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

 

Exit mobile version