Site icon Sangathy News

வடமராட்சி கிழக்கில் இறந்து கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இன்றைய தினமும் ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன.

கடல் சீற்றம் காரணமாக காயமடைந்து இந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குகின்றன என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்து கரையொதுங்கிய ஆமைகள் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றன.

Exit mobile version