ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தைப்பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்வார் என தெரியவருகிறது
இந்த விஜயத்தின்போது, காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

