அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எரிக் மையரை இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதராக நியமிக்க பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்க வெளிநாட்டு சேவையின் மூத்த தொழில்முறை உறுப்பினரான எரிக் மையர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் மூத்த பணியக அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார்.
அந்த பொறுப்பில், தெற்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும், அதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உட்பட, நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதையும் பணியகத்தை மேற்பார்வை செய்வதையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
மையரின் சமீபத்திய பணியிடங்களில், நோர்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடைக்கால பொறுப்பாளராக பணியாற்றியதும், மேலும் நேட்டோவின் புதிய உறுப்பு நாடுகளில் ஒன்றான வட மாசிடோனியாவின் ஸ்கோப்ஜே நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடைக்கால பொறுப்பாளராகவும் துணை தூதராக பணியாற்றியதும் அடங்கும்.
இலங்கையின் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய ஜூலி சங் நேற்று வெள்ளிக்கிழமை தனது பதவியிலிருந்து விடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

