Sangathy News

கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்துவைப்பு

கொழும்பு கொம்பனித் தெருவில் 3.2 பில்லியன் ரூபா செலவில் அமைப்கப்பட்ட புதிய மேம்பாலம் ஒன்று இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார். 321 மீற்றர் நீளத்தில் 11 மீற்றர் அகலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திறப்பு விழாவில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version