Site icon Sangathy News

திரு வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை(V. C. சபாரட்னம்) J. P

பிறப்பு01 JUN 1932 – இறப்பு09 FEB 2026
சேவைச் செம்மல், முன்னாள் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர்(தவிசாளர்), முன்னாள் வருமான பரிசோதகர்- நெடுந்தீவு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, யாழ். மாநகர சபை, முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர்- நெடுந்தீவு மேற்கு, நல்லூர் தெற்கு, முன்னாள் சனசமூக நிலைய செயலாளர்- நெடுந்தீவு மேற்கு, நல்லூர் தெற்கு
வயது 93
நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) நல்லூர், Sri Lanka

யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அபிராமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியவரதன்(முன்னாள் ஓய்வுபெற்ற அதிபர்- தவிசாளர் நெடுந்தீவு பிரதேச சபை), நிர்மலா, கிருபாவரதன்(மேலாளர் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம்), கோகுலவரதன்(லண்டன்), சந்திரகலா(ஆசிரியை- யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி), விஜயலதா(லண்டன்), பத்மவரதன்(கனடா), தவமேகலா(லண்டன்), பானுகலா(பிரான்ஸ்), அருள்வரதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, தெய்வானைப்பிள்ளை, சுப்பிரமணியம், பொன்னம்பலம், நாகமுத்து, குமாரசாமி, ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகாமி, கணபதிப்பிள்ளை, வேலாசிப்பிள்ளை, நல்லம்மா, காங்கேசு, வள்ளியம்மை, பாக்கியலட்சுமி, சிந்தாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மஞ்சுளா, பாக்கியலட்சுமி, சகுந்தலாதேவி(லண்டன்), புவனேந்திரா, தருமரத்தினம்(லண்டன்), பொன்மதி(கனடா), செல்வராசா(லண்டன்), சபேசன்(பிரான்ஸ்), ஜானகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குமரன்(லண்டன்), பிரியன், ஜனகன், துவாரகன், மகிபன்(லண்டன்), நிருஜன்(லண்டன்), கினோஜா(லண்டன்), மதுஷன், நிரோஷன், கிந்துஜன், அபியதர்சன்(லண்டன்), விட்டிலன்(கனடா), லக்சினி(கனடா), யனுசா(லண்டன்), தனுசா(லண்டன்), அனுராஜ்(லண்டன்), அபிராஜ்(லண்டன்), பானுசன்(பிரான்ஸ்), டினோசா(பிரான்ஸ்), கபிசன்(பிரான்ஸ்), அபிசன்(பிரான்ஸ்), ஆருத்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல.72, செட்டித்தெரு, நல்லூர் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

Exit mobile version