பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் இரத்துச் செய்வோம் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் கட்டத்தில் உள்ளது என்றும் இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
