கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் குடும்பபெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண் அதிக குருதி போக்கு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியர்கள் அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏற்கனவேஇரண்டு தாதியர்களும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுமாக நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.