இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு
Colombo (News 1st) இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் ஊடாக கட்டுப்பாடுகள் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.