
இரத்தினபுரி பிரபல வர்த்தகர்
இறப்பு – 11 OCT 1987
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) இரத்தினபுரி, Sri Lanka கொழும்பு, Sri Lanka
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தில்லைநாதன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
முப்பது ஐந்து ஆண்டுகள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்
போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் உங்கள் நீங்காத நினைவுடன்
குடும்பத்தினர்..!!..!!..!!
தகவல்: T. கேதீஸ்வரநாதன்(UK)

