அமரர் வேலுப்பிள்ளை பொன்னம்மா

மலர்வு14 FEB 1930, உதிர்வு11 APR 2022

வயது 92

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொட்டாஞ்சேனை, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பொன்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?  

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் – அம்மா
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்றது ஏனோ?  

ஆண்டுகள் பல ஆனதம்மா
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!  

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போல்
அன்பு கொள்ள யாருமில்லை!  

நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்….. 

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles