தமிழகத்தில் இன்று(16) முதல் அமுலாகும் மீன்பிடி தடைக்காலம்

Colombo (News 1st) தமிழகத்தில் இன்று(16) முதல் மீன்பிடி தடைக்காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருக்கும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்கிணங்க 61 நாட்களுக்கு மீன்பிடிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்த தடைக்காலத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பிராந்தியங்களில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles