இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 300 முதல் 400-க்கு இடைப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளது

 

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 300 முதல் 400-க்கு இடைப்பட்ட பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்திலிருந்து இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமைக்கு அமைவாக வணிக வங்கிகளின் வட்டி வீதம் 2.5 வீதத்தினால் குறைவடையும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதற்கான ஒழுங்குபடுத்தல் நிதி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here