Colombo (News 1st) சீனாவின் சவாலை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஆதரவை இலங்கை நாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில், பிரதமர் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த அவர், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் அறிவுரைகளை முன்னெப்போதையும் விட இலங்கை அரசு மிக தீவிரமாக நாடும் என்றும் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமான எல்பிட்டி பிரதேச சபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடையவுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி மூலம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் திகதி வரை எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles