ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை

Colombo (News 1st) ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் 14 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி இரவு மாணவர்கள் குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் H.கரீம் தெரிவித்தார்.

அமைதியின்மை தொடர்பான விசாரணைகளுக்காக ஐவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஏனைய வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles