கல்வியை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு

Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் இன்று பல்கலைக்கழகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இலவசக் கல்விக்கான உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்வியை தனியார்மயமாக்கி, சமூகத்தின் கல்விச் சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் என இதன்போது மாணவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

அவ்வாறு தனியார் மயமாக்குவதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அதனை மீளப்பெறும் வரை தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் எதிர்ப்பில் ஈடுபட்ட மாணவர்கள், பின்னர் கலைந்து சென்றனர்.

Previous article
Next article
Colombo (News 1st) இலங்கை ரூபாவானது மூன்று வாரங்களுக்குள் ஆசியாவின் சிறந்த நாணய அலகாகப் பதிவாகி, மீண்டும் ஆசியாவின் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளதாக Bloomberg செய்திச்சேவை தெரிவித்துள்ளது. வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை ஆகியவற்றின் காரணமாக டொலருக்கான கேள்வி உயர்வடைந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளதாக Bloomberg குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டொலரின் பெறுமதி 355 ரூபா வரை உயர்வடையும் என Hong Kong-இல் அமைந்துள்ள Natixis நிறுவனத்தை மேற்கோள்காட்டி Bloomberg இதனை தெரிவித்துள்ளது. டொலரின் இன்றைய விற்பனை பெறுமதி 336 ரூபா 16 சதம் வரை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles