Monday, February 9, 2026
Homeஇந்திய - கனடா விவகாரத்தில் இலங்கையின் ஆதரவு இந்தியாவிற்கே: உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு

இந்திய – கனடா விவகாரத்தில் இலங்கையின் ஆதரவு இந்தியாவிற்கே: உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு

Colombo (News 1st) இந்திய – கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளதாக Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது.

சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானதும் நேரடியானதுமாக உள்ளது  என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளதாக Hindustan Times-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், இந்த விடயங்களில் தமது நிலைப்பாடு தௌிவாக இருப்பதுடன்,  இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாகவும்  உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular