இலங்கையில் “லஞ்ச் ஷீட்” பயன்படுத்தத் தடை!

இலங்கையில் “லஞ்ச் ஷீட்“ பயன்படுத்துவதை தடை செய்ய 06 மாத கால அவகாசம் வழங்கி சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்பு குழுவினால் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி செயன்முறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்காக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் கூடியது.

சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை சுங்கம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று இதற்காக அழைக்கப்பட்டது.

இலங்கையில் லஞ்ச் ஷீட் பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள் குறித்தும், புற்றுநோயை உண்டாக்கும் பித்தலேட்ஸ் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது.

இதன்படி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை கருத்திற்கொண்டு, லஞ்ச் ஷீட்களை பயன்படுத்துவதை தடை செய்ய 06 மாதங்கள கால அவகாசம் வழங்கி, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்பு குழுவினால் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யதது

உலகில் எந்த நாட்டிலும் லஞ்ச் சீட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள், லஞ்ச் சீட்களை பயன்படுத்தாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை குழுவிடம் சுட்டிக்காட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles