Monday, February 9, 2026
Homeயாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!

பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்கு நேற்று (13) சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியினால் யாழில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நொதேர்ன் யுனியின் அனுசரனையில் எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular