Sunday, February 8, 2026
Homeயாழ். மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

யாழ். மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

அண்மையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்து அவரது குடும்பத்தினரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவியே கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular