சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சமன் ரத்நாயக்க இரகசிய வாக்குமூலம்

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, மாளிகாகந்த நீதவானிடம் 4 மணி நேர இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமன் ரத்நாயக்க கடந்த 4 ஆம் திகதி இரகசிய வாக்குமூலம் வழங்குவதற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதிலும், சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர் அவர் மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles