Saturday, February 7, 2026
Homeஅதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

Colombo (News 1st) அதிவேக நெடுஞ்சாலைகளின் உள்ளக பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் இந்த கடமையை முன்னெடுத்து வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிலிருந்து விலகியுள்ளனர்.

இந்த நிலையில், அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பிற்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் நேற்று (14)  முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்காக மாதாந்தம் சுமார் 12 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகம மற்றும் குருநாகலுக்கு இடையிலான பகுதியின் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை கூறியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular