புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் ஆசனங்கள்..!

புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் பல உடல் நல பிரச்சனைகளை சந்திப்பதுடன், புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களுக்கு பலியாகிறார்கள். புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 ஆம் திகதி அதாவது மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை ‘No Smoking Day’ கடைபிடிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதன் ஆபத்தை அறிந்தாலும் அவர்களால் கைவிட முடியவில்லை.

இதனால் சிலர் சந்தைகளில் விற்கப்படும் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால், அவை ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. அவர்களின் ஒருவராக நீங்களும் இருந்தால் அவர்களுக்கு புகைபிடிப்பதில் இருந்து விடுபட இயற்கை வைத்தியம் சிறந்தது. குறிப்பாக, யோகாசனம் மிகவும் சிறந்தது. புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் சில ஆசனங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

புஜங்காசனம்

புஜங்காசனத்தின் பயிற்சி கழுத்து மற்றும் மார்பை விரிவடைய செய்கிறது. இது நுரையீரலுக்கு போதுமான ஆக்சிஜனை வழங்குகிறது. இதனால், நுரையீரலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இந்த ஆசனம் புகைபிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதேபோல, நமது தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை எளிதில் கைவிடலாம்.

புஜங்காசனம் செய்யும் முறை:

முதலில், குப்புற படுக்க வேண்டும். பின்னர், உங்கள் இடுப்பு மற்றும் தலையை உயர்த்தி வில் போன்று வளையவும். அப்போது மூச்சை இழுத்து வெளியிடவும். உங்கள் கைகளை அருகில் ஊன்ற வேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்துவிட்டு, பிறகு இயல்பு நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் நீங்கள் அதை 3 முதல் 5 முறை பயிற்சி செய்ய வேண்டும், அதன் பிறகு நீங்கள் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

தனுராசனம்

தனுராசனாம் பயிற்சியின் போது, வயிறு, கைகள் மற்றும் கால்கள் மற்றும் மார்பின் தசைகள் நீட்டப்படுகின்றன. இதனால், நுரையீரல்கள் நல்ல பலனை அடைகிறது. இதன் வழக்கமான பயிற்சி நுரையீரலை பலப்படுத்துகிறது மற்றும் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதைத்தொடர்ந்து செய்வதால், புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்கலாம். மேலும், இது மனதையும் மூளையையும் உற்சாகப்படுத்துகிறது. இது புகைபிடிக்கும் பிடிவாதமான அடிமைத்தனத்தில் இருந்து விடுபட உதவுகிறது.

தனுராசனம் செய்யும் முறை:

முதலில், குப்புற படுக்கத்து பின்னர், மூச்சை உள்ளிழுத்து உடலின் மேல் பகுதியை வளைத்து, உங்கள் கைகளால் கணுக்கால்களை பிடித்து, கால்களை முழங்காலில் இருந்து பின்னோக்கி வளைக்க வேண்டும். இந்த நிலையில் உடலின் வடிவம் ஒரு வில் போல காணப்படும். எனவே தான் இது தனுராசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் சிறிதுநேரம் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் மூச்சை வெளியேற்றி இயல்பு நிலைக்கு வர வேண்டும்.

கபால்பதி

கபால்பதியின் வழக்கமான பயிற்சி சிகரெட் மற்றும் புகையிலை நுகர்வு ஆகியவற்றின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கும். உண்மையில், கபால்பதி மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது மன அமைதியையும் ஆற்றலையும் வழங்குகிறது. இது மன ஆற்றலையும், தன்னம்பிக்கையையும், புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கான உறுதியையும் வழங்குகிறது.

கபால்பதி பயிற்சி செய்வதன் மூலம், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் எளிதில் அகற்றப்படுகின்றன. இந்நிலையில், அதன் நடைமுறையானது சிகரெட் மற்றும் புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீங்குகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

கபால்பதி செய்யும் முறை:

இதற்காக, சுகாசன நிலையில் கால்களை மடக்கி உட்காரவும். உங்கள் தலை, கழுத்து மற்றும் இடுப்பு முற்றிலும் நேர்கோட்டில் இருக்க வேண்டும். இந்த நிலையில், இரண்டு உள்ளங் கைகளையும் இரண்டு முழங்கால்களிலும் மேல்நோக்கி வைத்து, வயிறை உள்நோக்கி இழுத்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை சிறிது நேரம் பிடித்து வைத்துவிட்டு மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.

நீங்கள் இதை குறைந்தது 10 முதல் 20 முறை செய்ய வேண்டும், இது கபால்பதியின் ஒரு சுற்று முடிவடையும். ஒரு பயிற்சியில் 1 முதல் 3 சுற்றுகள் செய்யலாம். இந்த யோகாசனங்களை பயிற்சி செய்வது புகைபிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும் மற்றும் புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கான மன ஆற்றலையும் உங்களுக்கு வழங்கும்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles