தந்தையின் காதை கடித்து துப்பிய ஆட்டோக்காரர் : பதிலுக்கு காதை கையோடு எடுத்த மகன்கள்..!

பல மாதங்களுக்கு முன்பு தனது தந்தையின் காதை கடித்து துப்பிய ஆட்டோக்காரின் காதுகளை அவரது மகன்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (45). ஆட்டோ ஓட்டுநரான இவர், சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத் தலைவரை சந்தித்துள்ளார். அப்போது தனது ஆட்டோவை ஏற்ற வசதியாக தனது வீட்டுக்கு அருகே உள்ள சாலையை சற்று சாய்வாக அமைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. ஆனால், அங்கு இருந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரான தயாளன், “உன் இஷ்டத்துக்கு எல்லாம் ரோடு போட முடியாது” எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது தயாளனின் காதை மகாலிங்கம் கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மகாலிங்கம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற மகாலிங்கம் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்தார். இந்நிலையில், மகாலிங்கத்தை பழிதீர்ப்பதற்காக பல மாதங்களாக தயாளனின் மகன்கள் காத்திருந்ததாக தெரிகிறது.

அதன்படி, நேற்று மகாலிங்கத்தின் ஆட்டோ ஸ்டாண்டுக்கு தயாளளின் 2 மகன்களும், உறவினர்களும் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கிய அவர்கள், அவரது காதை கத்தியால் அறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியில் அலறி துடித்த மகாலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தயாளனின் மகன்களான பிரவீன், விஜய் சங்கர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles