கங்கனா ரனாவத்தை அறைந்ததால் சஸ்பெண்ட் சிஐஎஸ்எப் பெண் காவலர் : ஆதரவாக குவிந்த விவசாயிகள்..!

கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு ஆதரவாக விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

நடிகையும், புதிதாக எம்.பி. தேர்தலில் ஜெயித்தவருமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக விவசாயிகள் டெல்லியில் குவிந்து வருகின்றனர். குல்விந்தர் கவுர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி வரும் ஜூன் 9-ம் தேதி முதல் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜகவின் தீவிர ஆதரவளாக விளங்கி வந்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியது. இதில் 5.37 லட்சம் வாக்குகளை பெற்று கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில்தான், நேற்று கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றிருந்த போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எப் பெண் காவலர், கங்கனாவின் கன்னத்தில் பளாரென அறைந்தார். எதிர்பாராமல் விழுந்த அறையால், அதிர்ச்சியான கங்கனா, விறுவிறுவென விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்ட போதும், அவரால் பதிலளிக்க முடியவில்லை.

டெல்லியில் 2020-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பார்த்து, தீவிரவாதிகள் என்று கங்கனா கூறியதாலேயே அவரை அறைந்தததாக சிஐஎஸ்எப் காவலர் குல்விந்தர் கவுர் தெரிவித்தார். இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுதொடர்பாக வரும் ஜூன் 9-ம் தேதி பஞ்சாபின் மொகாலியில் நீதி பேரணியை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles