நடப்பாண்டின் ஹஜ் யாத்திரையின் போது 550 இஸ்லாமிய யாத்திரிகர்கள் வெப்பமான காலநிலை மற்றும் ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலையில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர்கள் பலர் உடல் நசுங்கி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.















