அமெரிக்காவில் அவ்வப்போது பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் பெரும்பாலானோரிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பதை போல துப்பாக்கிக் தோட்டாக்களை உடனுக்குடன் வெண்டிங் இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதி மளிகைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து , தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
